Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மார்பில் திருசூலத்தை பச்சை குத்தி சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை! 

டிசம்பர் 02, 2020 08:49

சென்னை: தெலுங்கு சினிமாவில் நடித்து கொண்டிருந்தவர் பூனம் கவுர். தமிழில், ‘நெஞ்சிருக்கும் வரை’ என்ற படத்தில் நரேனுக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படம் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. 

இதனைத் தொடர்ந்து கமலஹாசனின், ‘உன்னைப்போல் ஒருவன்’, ராதாமோகனின், ‘பயணம்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பூனம் கவுர் புகைப்படம் ஒன்றை இந்து அமைப்புகளின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். அதாவது கடவுளின் ஆயுதமான திரிசூலத்தை தனது மார்பில் பச்சை குத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இந்து அமைப்பினர், 

‘திரிசூலம் என்பது கடவுளின் ஆயுதம். அதனை மார்பில் பச்சை குத்துவது பெரிய தவறு’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் போராட்டமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 
 

தலைப்புச்செய்திகள்